Friday, November 7, 2014

"பெண்ணவளின் அரசன் வந்தான் .."

அழகா!! 
கனவு மாளிகை ஒன்று
மீண்டும் காணக் கண்டு 
அங்கு அரசனாய் நீ நின்று 
கன்னங்கள் சிவக்கச் செய்தாய் 
விண்ணில் மிதக்கும் மோகம் கொண்டேன் 
மதுவென இனிக்கும் முத்தங்கள் தந்தாய் 
பறந்து செல்லும் தாகம் கொண்டேன் 
"பார்த்துச் செல்" என பாசம் தந்தாய்.
வானவில் காணும் காதல் கொண்டேன் 
வண்ணங்கள் இங்கே என கண்ணாடி தந்தாய் 
சித்திரமாய் ரசித்துக் கொண்டு 
கிளிப் பிள்ளை ஒன்று 
மொழிந்ததெல்லாம் கூறி நின்று 
பெண்ணவளை மயக்கி விட்டாய் 
சிறகுகள் இன்றி சருகென நின்றேன் 
வண்ணத்துப் பூச்சியாய் நீ நின்றாய் அருகில்..
ஆர்ப்பரிக்கும் கணங்கள் தந்து 
அற்புத உலகம் ஒன்று 
உன்னுடன் கிட்டும் என்று 
கூறாமல் கூறிச் சென்றாய் :) <3

- கனவு மாளிகை Architect
SARAH (சாரா)